திடீர் அனர்த்த நிலைக்கு முகம் கொடுத்தல்
- திடீரென தீப்பற்றுதல் மற்றும் சுனாமி அனர்த்தங்களை உணர்த்தும் ஒத்திகை நிகழ்ச்சித்திட்டங்கள் அனர்த்தங்களின்போது செயற்பட வேண்டிய முறை தொடர்பாக காலி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற பூர்வாங்க அனர்த்த தயார் நிலை நிகழ்ச்சித்திட்டங்களில் பணியாட் தொகுதியினரை ஈடுபடுத்துதல்.
- மாகாணத்தில் மேகொள்ளப்படுகின்ற நிர்மாண பணிகளின்போது உரிய அறிவு, ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களை வழங்கும் நோக்கில் பில்டிங் கிளினிக் நிகழ்ச்சித்திட்டத்தை செயற்படுத்துதல்.
பயிற்சி மற்றும் திறன் விருத்தி
- 2018ஆம் ஆண்டுக்காக புதிதாக நியமிக்கப்பட்ட தென் மாகாண கௌரவ மக்கள் பிரதிநிதிகளுக்காக உள்ளூராட்சி நிறுவனங்கள் தொடர்பாக அறிந்து கொள்ள வேண்டிய பொது சட்டங்கள், ஒழுங்குவிதிகள் மற்றும் சபை நடவடிக்கைகள் என்பவை தொடர்பாக செயல்முறைகளுடன் 07 பயிற்சி செயலமர்வுகளை மாகாணத்திற்கு வெளியில் உள்ள இடங்களில் நடத்துதல்.
- வருடாந்த பயிற்சி திட்டத்திற்கு அமைவாக பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களுக்கு உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.
அதன் பிரகாரம் தென் மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் 2018ஆம் ஆண்டில் இத் திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான விபரம் கீழே தரப்பட்டுள்ளது.
MDTI - வக்வெல்ல - பயிற்சி நிகழ்ச்சித்திட்டத்தின் முன்னேற்றம் - 2018
பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் | 2018 |
கோவைப்படுத்தல் மற்றும் நிறுவனம் | 13 |
கணினி மற்றும் தொழில்நுட்பம் | 06 |
கணக்கு நடவடிக்கைகள் | 30 |
மனோபாவ அபிவிருத்தி | 05 |
கருத்திட்டம் மற்றும் திட்டமிடல் | 01 |
சட்டம் மற்றும் விசாரணை | 05 |
உற்பத்தித் திறன் | 08 |
ஏனைய பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் | 27 |
மொத்தம் | 95 |
- பட்டப்பின் படிப்பு பாட நெறிகளுக்காக உத்தியோகத்தர்களை ஈடுபடுத்துதல் மற்றும் அதற்கான நிதி ஏற்பாடுகளை வழங்குதல்.
- பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஒவ்வொரு சேவைகளின் கீழ் தெரிவு செய்யப்பட்டவர்களை கடமை விடயப் பரப்பிற்கு உரிய பயிற்சிகளுக்காக வெளிநாட்டு சுற்றுலாவில் ஈடுபடுத்துதல்.
- உற்பத்தித் திறன் எண்ணக்கரு தொடர்பாக விரிவுரை நடத்துகின்ற உத்தியோகத்தர்களைக் கொண்டு அலுவலகத்துக்குள்ளும் அதற்கு வெளியிலும் ஒரு நாள் பயிற்சியை வழங்குதல்.
- தேசிய உற்பத்தித் திறன் போட்டி - 2018 2018ஆம் ஆண்டுக்கு உரியதாக நடத்தப்பட்ட தேசிய உற்பத்தித் திறன் போட்டித் தொடரில் தென் மாகாண உள்ளூராட்சி திணைக்கள அலுவலகம், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகம் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்கள் என்பவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்டதோடு, இதில் அரச திணைக்கள பிரிவையும் நுண் அளவு நிறுவன பிரிவையும் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்டது.
- 2018 நவம்பர் மாதம் 30 - உள்ளூராட்சி நிறுவன விளையாட்டு விழா, காலி மாவட்ட உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு இடையில் ஒத்துழைப்பையும் நல்லுறவையும் வளர்த்துக்கொள்ளும் நோக்கத்தில், தென் மாகாண கௌரவ முதல் அமைச்சரின் தலைமையில் காலி, புனித எல்வீசியஸ் விளையாட்டரங்கில் காலி மாவட்டத்தின் அனைத்து உள்ளூராட்சி நிறுவன பணியாட் தொகுதியிளரின் பங்கேற்புடன் உள்ளூராட்சி விளையாட்டு விழா நடத்தப்பட்டது.
- 2018 நவம்பர் மாதம் 29 - உள்ளூராட்சி நிறுவன விளையாட்டு விழா, மாத்தறை மாவட்ட உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு இடையில் ஒத்துழைப்பையும் நல்லுறவையும் வளர்த்துக்கொள்ளும் நோக்கத்தில், தென் மாகாண கௌரவ முதல் அமைச்சரின் தலைமையில் ஹக்மன, பிரதேச சபை விளையாட்டரங்கில் மாத்தறை மாவட்டத்தின் அனைத்து உள்ளூராட்சி நிறுவன பணியாட் தொகுதியிளரின் பங்கேற்புடன் உள்ளூராட்சி விளையாட்டு விழா நடத்தப்பட்டது.
- 2018 நவம்பர் மாதம் 27 - உள்ளூராட்சி நிறுவன விளையாட்டு விழா, அம்பாந்தோட்டை மாவட்ட உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு இடையில் ஒத்துழைப்பையும் நல்லுறவையும் வளர்த்துக்கொள்ளும் நோக்கத்தில், தென் மாகாண கௌரவ முதல் அமைச்சரின் தலைமையில் அங்குணுகொலபெலஸ்ஸ, பிரதேச சபை விளையாட்டரங்கில் அம்பாந்தோட்டை மாவட்டத்தின் அனைத்து உள்ளூராட்சி நிறுவன பணியாட் தொகுதியிளரின் பங்கேற்புடன் உள்ளூராட்சி விளையாட்டு விழா நடத்தப்பட்டது.
- பணியாட் தொகுதி உத்தியோகத்தர்களின் அறிவு, திறமை மற்றும் ஆற்றல் என்பவை தொடர்பான தகவல்களை விண்ணப்ப படிவத்தின் மூலம் பெற்றுக் கொண்டு திணைக்களத்தில் அவர்களின் ஆற்றலுக்கு சந்தர்ப்பம் அளித்தல். அதன் பிரகாரம், விளையாட்டு போட்டிகளுக்கு திறமையுள்ள உத்தியோகத்தர்களை அடையாளம் கண்டு அவர்களை ஈடுபடுத்துதல்.
- அவ்வாறே 2018 தென் மாகாண அரச சேவை விளையாட்டு போட்டித் தொடருக்கு ஈடுபடுத்தப்பட்ட அரச முகாமைத்துவ உதவியாளர் திரு. எம்.டீ. நிலங்க பிரேமரத்ன பின்வருமாறு வெற்றி பெற்றுள்ளார்.
நீளம் பாய்தல் - 3ஆம் இடம் - சிந்தனை வீடு உருவாக்கல் பலகைக்கு படைப்புகளைச் சமர்ப்பித்ததன் ஊடாக எழுத்தாற்றலையும் படைப்பாற்றலையும் மேம்படுத்திக் கொள்ளுவதற்கு சந்தர்ப்பம் அளித்தல்.
- திறன் விருத்தியை ஊக்குவிப்பதற்காக உத்தியோகத்தர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி நிகழ்ச்சித்திட்டமொன்றை சேவை நிலையத்திற்கு வெளியில் ஒழுங்குசெய்து கொடுத்தல்.
- அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வட மாகாணத்தில் யாழ்ப்பாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகம் மற்றும் ஊர்காவற்றுறை பிரதேச சபை நடவடிக்கைகளை அவதானிக்கும் சுற்றுலாவை ஒழுங்கு செய்தல்.
உள்ளூராட்சி நிறுவனங்களில் செயலாற்றுகையை வளர்த்தல்
- உள்ளூராட்சி நிறுவனத்திற்கு உற்பத்தித் திறன் போட்டியில் கலந்து கொள்ளுவதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குவதற்காக விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித்திட்டங்களை ஒழுங்கு செய்தல்.
- உள்ளூராட்சி நிறுவன பணியாட் தொகுதியினருக்காக பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை ஒழுங்கு செய்தல்.
(முன்பள்ளி ஆசிரியைகளுக்குப் பயிற்சியளிக்கும் நிகழ்ச்சித்திட்டம்/திண்ம கழிவுப் பொருள் முகாமைத்துவ பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்Æஏனைய விடயங்களோடு இணைந்த நிகழ்ச்சித்திட்டங்கள்) - உள்ளூராட்சி நிறுவனங்களில் கணக்காய்வு முகாமைத்துவ குழுக்களை நடத்துதல்.
- உள்ளூராட்சி நிறுவன அலுவலகங்களில் கடமைகளை வினைத்திறன் மிக்கதாக்குவதற்காக கணினிகளை வழங்குதல்.
முன்பள்ளிகள், நூலகங்கள் மற்றும் சுதேச மருத்துவ மருந்தகங்கள் என்பவற்றிற்காக மாகாணத்தில் குறித்தொதுக்கப்பட்ட உள்ளூராட்சி மற்றும் ஏனைய சேவைகளின் கீழ் 14 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதோடு, அதன் கீழ் 15 கருத்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன.
- உள்ளூராட்சி நிறுவன முன்பள்ளிகளுக்காக ஆசிய மன்றத்தின் அனுசரணையுடன் சுமார் ரூபா 11,688,091.82 பெறுமதியான புத்தகங்களை வழங்குதல்.
- உள்ளூராட்சி நிறுவன இலவச சுதேச (ஆயுர்வேத) மருந்தகங்களுக்கு ரூ. 3 மில்லியன் செலவில் தேவையான மருத்துவ உபகரணங்களையும் ஏனைய தேவைகளையும் வழங்குதல்.
- 03 மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 03 ஆயுர்வேத சிகிச்சை நிலையங்களை நடத்துதல்.
- உள்ளூராட்சி நிறுவன நூலகங்களுக்கு பரீட்சை நடவடிக்கைகளுக்காகவும் ஏனைய கல்வி நடவடிக்கைகளுக்காகவும் தேவப்படும் சுமார் 17.5 மில்லியன் ரூபா பெறுமதியான புத்தக தொகுதியை வழங்குதல்.
பிரமாண அடிப்படையிலான தகன கூடங்கள் அபிவிருத்தியின் கீழ் 17 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதோடு, அதன் கீழ் 12 தகன கூடங்கள் மற்றும் மயானங்கள் என்பவற்றின் அபிவிருத்தி பணிகள் செயற்படுத்தப்பட்டுள்ளன.
பிரமாண அடிப்படையிலான வார சந்தை அபிவிருத்தியின் கீழ் 14 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதோடு, அதன் கீழ் 13 கருத்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன.
கழிவுப் பொருள் முகாமைத்துவம்
- ரூ. 10 மில்லியன் செலவில் மொன்ரோவியாவத்த திண்ம கழிவுப் பொருள் முகாமைத்துவ நிலைய கேட்போர்கூடம், நுழைவுப் பாதை மற்றும் வாகனம் கழுவும் மேடை என்பவற்றை அபிவிருத்தி செய்தல்.
- 2018 ஆம் ஆண்டில் தென் மாகாணத்தில் உள்ளூராட்சி நிறுவனங்களுக்காக சேதனப் பசளை தொட்டிகளும் முன்பள்ளிகளுக்காக குப்பைகளைத் தரம் பிரிக்கும் தொட்டிகளும் வழங்கப்பட்டுள்ளன
- மொன்ரோவியாவத்த திண்ம கழிவுப் பொருள் முகாமைத்துவ கருத்திட்டத்துடன் இணைந்ததாக சூரிய சக்தி கருத்திட்டமொன்றை ரூ. 1.05 மில்லியன் செலவில் ஆரம்பித்தல்.
ஊழியர் நலனோம்பல்
- உள்ளூராட்சி திணைக்கள உத்தியோகத்தர்களின் நலன்புரி சங்கத்தை அமைத்து அதன் மூலம் அவர்களின் நலனோம்பல் தேவைகளுக்காக சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. அதன்போது அங்கத்தவரின் மற்றும் அவருடைய குடும்பத்தவர்களின் நலனோம்பல் தேவைகளுக்காக நிதி வசதிகள் வழங்கப்படுகின்றது.
- அலுவலகத்தில் புதன் கிழமைக்காக அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் நலன்புரி சங்கத்தின் மூலம் சீருடை வழங்குதல்.
- அலுவலகத்திலும் அதற்கு வெளியிலும் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தும் சந்தர்ப்பங்களில் பயன்படுத்துவதற்காக ரி-சேட் ஒன்று வழங்குதல்.
- அனைத்து அங்கத்தவர்களின் பிறந்த நாளுக்காக பரிசொன்றை வழங்குதல்.
- அனைத்து உத்தியோகத்தர்களின் தனிப்பட்ட நிதி அனுசரணையுடனும் பங்கேற்புடனும் காலி, உனவட்டுன பொனவிஸ்டா முதியோர் இல்லத்திற்கு வருடாந்தம் இரவு தானம் வழங்கும் புண்ணிய கைங்கரியத்தை ஒழுங்கு செய்தல்.
- திடீர் அனர்த்தங்கள் மற்றும் விபத்துக்களின்போது நிதி உதவி வழங்குதல்.