உள்ளூராட்சியின் விரிவாக்கமும் கூட்டிணைவும்
உள்ளூராட்சி ஒரு நாட்டின் மக்களுக்கு மிக நெருக்கமான ஆட்சி முறையாகும். அது பிரதேச ரீதியாகச் செயற்படுகின்ற அதே வேளையில், அவற்றின் அதிகார பிரதேசங்கள் திட்டவட்டமாக ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த ஒவ்வொரு பிரதேசத்திற்கும் வௌ;வேறாக ஓர் உள்ளூராட்சி நிறுவனம் என்ற வகையில் நிறுவப்பட்டுள்ளது. பெரும்பாலும் அந்த நிறுவனங்கள் நகர மற்றும் கிராமிய ரீதியாகப் பிரித்து இனம் காண முடியும். இந்த ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு அதிகார பிரதேசத்திற்காக அதன் மக்களால் தெரிவு செய்யப்படுகின்ற பிரதிநிதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டு சட்ட ரீதியாக அதிகாரம் அளிக்கப்பட்ட சபையின் (council) மூலம் நிருவகிக்கப்படுகின்றது.
உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள விடயப்பரப்பும் கடமைப் பொறுப்பின் விரிவாக்கமும் சுயாதீன தன்மையின் அளவும் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. ஒவ்வொரு நாட்டிலும் உள்ளூராட்சி மாதிரியின் தன்மை சில காரணிகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு நாட்டில் வரலாற்று ரீதியான பாரம்பரியங்கள், அதன் மக்களின் அறிவு மற்றும் இவை எல்லாவற்றையும் விட உள்ளூராட்சி எண்ணக்கரு மீது அந்த நாட்டு அரசியல் மற்றும் நிர்வாக பிரபு வர்க்கத்திடம் உள்ள மனோபாவம் இதற்குப் பயன்படுகிறது.
உள்ளூராட்சி பெரிதும் முன்னேற்றமடைந்த மட்டத்தில் உள்ள மேற்குலகத்தில் பல நாடுகள் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு பொதுமக்களுக்கு சேவையாற்றக்கூடிய வகையில் பொலிஸ் சேவை, கல்வி, சமூக சேவை, போக்குவரத்து, வீடமைப்பு, சுற்றாடல் முகாமைத்துவம் போன்ற பல விரிவான சேவைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பெரிய பிரித்தானியா மற்றும் ஸ்கென்டிநேவியா ஆகிய நாடுகள் இந்த நாடுகளுக்கிடையில் முன்னணியில் திகழ்கின்றன. இதன் எதிர் முனையாக உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்காத நிலையாக வரையறுக்கப்பட்ட பரப்பெல்லைக்குள் செயற்பாடுகளை அரசின் அல்லது அரசுகளின் தீவிர கட்டுப்பாட்டின் கீழ் ஒப்படைக்கப்பட்டுள்ள சந்தர்ப்பங்களும் உண்டு.
மேற் குறிப்பிட்ட தன்மைகளுக்குப் புறம்பாக வேறு விதமாக ஒழுங்கமைக்கப்பட்ட செயல்முறைகள் ஏனைய நாடுகளில் செயற்படுகின்றன. இலங்கையில் உள்ளூராட்சியின் விரிவாக்கத்தை மிகக் கவனமாக ஆராய்கின்ற போது கடந்த காலத்தில் இந்த நாடு உள்ளூராட்சி நிறுவன விடயப்பரப்பு மற்றும் அதிகாரம் தொடர்பாக விரிவான ஒரு பரப்பெல்லையில் கடமைகளையும் நேரொத்தாக உயர் மட்டத்தில் சுயாதீன தன்மையையும் அனுபவித்துள்ளது என்பதை காண முடிகிறது. ஆயினும் பிற்காலத்தில் ஏற்பட்ட அரசியலமைப்பு ரீதியான மாற்றங்களின் காரணமாக தற்போது இந் நாட்டில் உள்ளூராட்சி வரையறுக்கப்பட்ட பரப்பெல்லையில் விரிவடைந்த அதிகாரங்களுடனும் விடயப்பரப்புடனும் செயற்படுவதைக் காண முடிகிறது.
எவ்வாறாயினும் எந்தவொரு நாட்டின் அல்லது உள்ளூராட்சியின் விடயப்பரப்பிற்கு தேசிய அல்லது பிராந்திய அல்லது மகாணங்களுக்கு உரிய விடயங்கள் உரித்தாவதில்லை. அவ்வாறே ஒரு நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு நேரடியாகத் தாக்கமேற்படுத்துகிற விடயங்கள், தேசிய பாதுகாப்பு, சர்வதேச உறவுகள், தனிநபர் சுதந்திரம், மனித உரிமைகள், தொடர்பாடல் போன்றவை தொடர்பான அதிகாரம் தேசிய ஆட்சி அதிகாரத்திற்கு அன்றி உள்ளூராட்சிக்கு ஏற்புடையதாகாது. நாகரீகமான ஒரு சமூகத்தின் மனைசார்ந்த நடவடிக்கைகளை இலகுபடுத்துவது உள்ளூராட்சியின் பிரதான கடமையாகும். (Administration of domestic affairs of a civilized society) மக்கள் தமது அன்றாட வாழ்க்கையை நடத்துகின்ற பிரதேசத்தை சுத்தமாக சுகாதாரமாக மற்றும் வாழ்வதற்கு உகந்த இடமாக மாற்றுவது உள்ளூராட்சிக்கு உரித்தான அடிப்படை பொறுப்பாகும். அதற்குப் பயன்படும் வகையில் நகரத்தைத் தூய்மையாக வைத்திருத்தல், வீடுகள் மற்றும் கட்டிடங்களை அமைப்பதை கட்டுப்படுத்துதல் மற்றும் ஒழுங்குமுறைப்படுத்துதல், பாதிப்புகளைத் தடுத்தல் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு வசதிகளை ஏற்படுத்துதல் போன்றவை உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பணிகளாகும்.
உள்ளூராட்சி திணைக்கள கூட்டிணைவு
தென் மாகாணத்தில் உள்ளூராட்சி திணைக்களத்தை கூட்டிணைப்பதற்கு உரிய பிரதான சட்ட தோற்றுவாய் 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட 13வது திருத்தத்தின் மூலம் மாகாண சபைகளை அமைத்ததாகும் உள்ளூராட்சி விடயத்திற்கு உரியதாக உள்ளூராட்சி நிறுவனங்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குதல், உதவுதல் மற்றும் வழிகாட்டுதல் என்பவை உள்ளூராட்சி திணைக்களத்தின் எதிர்பார்க்கப்பட்ட பிரதான நோக்கமாக உள்ளது. அதற்காக 1989ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க மாகாண சபை (இடைநேர் விளைவான ஏற்பாடுகள்) சட்டத்துடன் சேர்த்து வாசிக்க வேண்டிய உள்ளூராட்சி நிறுவன கூட்டிணைப்பு 252 அதிகாரசபையான 1947ஆம் ஆண்டின் 29ஆம் இலக்க மாநகரசபை கட்டளைச் சட்டம், 1939ஆம் ஆண்டின் 61ஆம் இலக்க நகரசபை கட்டளைச் சட்டம் மற்றும் 1987ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க பிரதேச சபை சட்டம் என்பவற்றின் மூலம் உள்ளூராட்சி திணைக்களத்திற்கு அதிகாரம் கிட்டியுள்ளது.
இந்த திணைக்களத்தின் மூலம் எதிர்பார்க்கப்பட்ட பிரதான நோக்கம்
- தென் மாகாண அதிகார பிரதேசத்தில் உள்ள உள்ளூராட்சி நிறுவனங்களின் நடவடிக்கைகளைக் கண்காணித்தல்.
- உள்ளூராட்சி நிறுவனங்களின் நடவடிக்கைகளின் பொருட்டு ஆலோசனை சேவைகள் மூலம் வழி காட்டுதல்.
- உள்ளூராட்சி நிறுவனங்களின் மூலம் நிறைவேற்றப்படுகின்ற பொதுமக்கள் சேவைகளை மிகச் சிறந்த முறையில் நடத்துததல், மேம்படுத்துதல் மற்றும் நிதி உதவிகளை வழங்குதல்.
தென் மாகாண அதிகார பிரதேசத்தில் காலி, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள 03 மாநகர சபைகள், 04 நகர சபைகள் மற்றும் 42 பிரதேச சபைகள் என்பவற்றில் மனிதவள நடவடிக்கைகள் மற்றும் பௌதிக வளங்கள் அபிவிருத்தி நடவடிக்கைகள் என்பவற்றிற்கு ஒதுக்கப்படுகின்ற நிதி ஏற்பாடுகளுக்குத் திட்டங்களைத் தயாரித்தல், செயற்படுத்தும் நிறுவனங்களை இயக்குதல், கண்காணித்தல் மற்றும் மதிப்பீடு செய்தல், கருத்திட்டங்களைச் செயற்படுத்தும்போது தேவைப்படுகின்ற வழிகாட்டல், தொழில்நுட்ப மற்றும் ஏனைய சேவைகளை வழங்கி மாகாணத்தில் உள்ள பொதுமக்களுக்கு உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை வழங்குவதற்கு உள்ளூராட்சி திணைக்களம் நடவடிக்கை மேற்கொள்ளுகிறது. 2018ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட உள்ளூராட்சித் தேர்தலின் மூலம் தென் மாகாணத்தில் உள்ளூராட்சி நிறுவனங்களின் மூலம் விரிவான மக்கள் சேவையை வழங்குவதற்காக 1131 மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு, அப் பணிகளுக்கு ஒத்துழைப்பு நல்குவதற்காக ஆற்றலுள்ள சுமார் 6373 நிரந்தர ஊழியர்கள் தினசரி சேவையில் ஈடுபடுகின்றனர்.
தென் மாகாணத்தில் மக்களுக்கு மிக உயர்ந்த பயனுறுதிமிக்க சேவைகளை நிறைவேற்றுவதற்காக உள்ளூராட்சி நிறுவனங்களில் சேவையில் ஈடுபட்டுள்ள பணியாட் தொகுதியினரின் செயலாற்றுகையை வளர்ப்பதற்காக அவர்களின் அறிவு, மனோபாவம், திறன் என்பவற்றை வளர்க்கும் நிகழ்ச்சித்திட்டங்களைத் துரிதமாக செயற்படுத்துவதற்காகவும், உள்ளூராட்சி திணைக்களம் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்கள் ஆகியவற்றிற்கிடையில் அறிவைப் பகிர்ந்து கொள்ளும் நிலையமொன்றை உருவாக்குவதற்காகவும், ஆசிய மன்றத்தின் நிதி மற்றும் தொழில்நுட்ப அனுசரணையுடன் உள்ளூராட்சி திணைக்கள அலுவலகத்தில் உள்ளூராட்சி வள நிலையமும் தக்ஷின பாய அமைச்சு கட்டிடத் தொகுதியில் 06வது மாடியில் உள்ளூராட்சி வள பயிற்சி நிலையமும் நடத்தப்படுவதோடு, அதன்மூலம் உள்ளூராட்சி நிறுவனங்களுக்காக 2017 மற்றும்; 2018 ஆகிய ஆண்டுகளில் பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் நடத்தப்பட்டன. தென் மாகாண சபை அதிகார பிரதேசத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள 03 மாநகர சபைகள், 04 நகர சபைகள் மற்றும் 42 பிரதேச சபைகள் என்பவற்றிற்கு அபிவிருத்திப் பணிகளுக்காக ஒதுக்கப்படுகின்ற நிதி ஏற்பாடுகள் மூலம் அப் பணிகளை நிறைவேற்றுவதற்காக அந் நிறுவனங்களை இயக்குதல், வழி காட்டுதல், ஆலோசனை வழங்குதல், கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் தேவையான நிதி உதவிகளை வழங்குவதும், தொழில்நுட்ப சேவைகள் மற்றும் ஏனைய சேவைகள் என்பவற்றை வழங்கி மாகாணத்தின் பொதுமக்களுக்கு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மிகச் சிறந்ததாக்கிக் கொள்ளுவதற்கு நடவடிக்கை எடுப்பது உள்ளூராட்சி திணைக்களத்தின் பொறுப்பாகும்.